Header Ads

test

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் தேடப்பட்டு வந்த முக்கிய புள்ளி பலி.

 பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த ஹேவா லுனுவிலகே லசந்த, உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று அதிகாலை களுத்துறை, தியகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சந்தேகநபருக்கு சொந்தமான கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றை பொலிஸார் தேடிச் சென்றிருக்கின்றனர்.

அப்போது சந்தேகநபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில், பொலிஸாரின் பதில் தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை இச்சம்பவத்தில் 2 பொலிஸார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , களுத்துறை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் இருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பலியான நபர் ஷன்சைன் சுத்தாவின் கொலை உள்ளிட்ட மேலும் பல படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


No comments