Header Ads

test

நாட்டில் மீண்டும் அதிகரித்துச் செல்லும் கொவிட் தொற்று.

இலங்கையில் இன்று இதுவரை 572 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 542,211 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இன்று, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 448 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 513,540 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்ம எண்ணிக்கை 13,770 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments