Header Ads

test

நாட்டில் மீண்டும் அதிகரித்துச் செல்லும் கொவிட் மரணங்கள்.

 நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி 12 ஆண்களும் 07 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 12 பேரும் 30 மற்றும் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 07 பேரும் மரணித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை , கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,725 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரையில் , இலங்கையின் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 539,844 ஆக அதிகரித்துள்ளது.


No comments