Header Ads

test

மட்டு.வெல்லாவெளி பகுதியில் வாய்க்காலுக்கருகில் ஆணொருவரின் சடலம் மீட்பு.

  மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமத்தில் உள்ள வாய்காலிலிருந்து நேற்று மாலை ஆண் ஒருவரின்  சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர் 8 பிள்ளைகளின் தந்தையான அமர சிங்கம்(47) என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். நேற்று மாலை வயலுக்கு சென்ற அமரசிங்கம் வீடு திரும்பாத நிலையில் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது -

 38ம் கிராமம் வைரவர் ஆலயத்துக்கு அருகில் உள்ள வயல் வடிகால் பகுதியில் துவிச்சக்கரவண்டியும் குறித்த சடலமும் காணப்பட்டுள்ள நிலையில் அப் பகுதியால் சென்றவர்களே அடையாளம் கண்டுள்ளனர். 

இது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து  சடலம் தொடர்பான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.     


No comments