Header Ads

test

யாழில் ஏற்பட்ட கோர விபத்தால் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

 யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன் சிறிய ரக லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிறிய ரக லொறி மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி அம்பாள் குளத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் சுரேஷ்குமார் என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  


No comments