Header Ads

test

வாய்த் தர்க்கம் முற்றியதால் மனைவியின் உயிரை பறித்த கணவன்.

 குடும்பத்தில் நிதிப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் கணவனின் தாக்குதலில் மனைவி உயிரிழந்துள்ளாதக களுவாஞ்சிக்குடி காவதுறையினர் தெரிவித்துள்ளனர்

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்தள்ளார்.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 38 வயதான கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த நபர் வெளிநாட்டிலிருந்து அண்மையிலேயே வருகை தந்துள்ளமை முதல்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பணம் கையாளப்பட்ட விதம் தொடர்பில் இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நபர் தனது மனைவியைத் தாக்கியதால் காயமடைந்த பெண், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments