Header Ads

test

திங்கள் முதல் வழமைக்குத் திரும்பும் புகையிரத சேவை.

  மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் கொவிட் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.எனினும் நாடு தற்போது வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் புகையிரத சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதன்படி இந்த சேவைகள் எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடருந்து நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் மாத்திரம் தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 133 தொடருந்துகள் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எனினும், இதன்போது, தொடருந்து பிரயாண பருவச்சீட்டு உள்ளவர்கள் மாத்திரமே குறித்த தொடருந்துகளில் பயணிக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments