Header Ads

test

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.

 மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயதான நபருக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டணை வழங்கி கம்பஹா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் சந்தேகநபருக்கு மூன்று இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்துள்ளதுடன் அதனைச் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் இரு வருடங்கள் சிறைத்தண்டனை அதிகரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை நேற்று முன்தினம் கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க பிறப்பித்துள்ளார்.

மல்வத்துபிட்டிய, கினிகமவில் பிரதேசத்தில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 02 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த 44 வயது பெண் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் உறவினர் ஒருவருக்கு வழங்கிய தகவலுக்கமைய ஒரு பிள்ளையின் தந்தையான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நீதிபதியிடம் முன்வைத்த ஆதாரங்களுக்கமைய குற்றவாளியாகக் கருதப்பட்டு 17 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


No comments