Header Ads

test

நாட்டில் தொடரும் கொவிட் மரணங்கள்.

 நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 22 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,696 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 30 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவர் மாத்திரமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாகவும், 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 06 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 15 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 30 - 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 3 ஆண்களும் 3 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 6 ஆண்களும் 9 பெண்களும் அடங்குவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments