Header Ads

test

யாழில் தவறான முடிவால் உயிரைவிட்ட குடும்பஸ்த்தர்.

 யாழ். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை கிழக்கு பகுதியில் 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த நபரின் குடும்பத்தவர்கள் காலையில் எழுந்து பார்த்தபோதே குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments