Header Ads

test

ஆப்கானிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 பேர் பலி.

 ஆப்கானிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள ஈத் கா என்ற பள்ளிவாசலில் இன்று இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 32 பேர் வரை காயமடைந்துள்ளனர் என அந்த நாட்டு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி காரி சயீத் கோஸ்டி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

எனினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லயென தெரிவிக்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் தலீபான் அமைப்புகள் பொறுப்பேற்ற பின்னர் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.


No comments