Header Ads

test

நாட்டில் நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டம் நீக்கம்.

 நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்த்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர் நாடு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் , இது தொடர்பில் பல தரப்புகளுடனும் சுகாதார அமைச்சு ஆலோசனைகளை பெற்றுவருவதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் முதலாம் திகதி தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்தை ஒக்டோபர் 15 ஆம் திகதியளவிலேயே ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் , நிகழ்வுகளை நடத்துதல் உட்பட இதர விடயங்கள் தொடர்பில் 15 ஆம் திகதியளவிலேயே தீர்மானம் எட்டப்படவுள்ளதாக  தெரிவிக்கின்றன.


No comments