Header Ads

test

யாழில் திடீரென உயிரிழந்த இளைஞனால் முழுக் கிராமமே சோகத்தில்.

யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தில் 20 வயதான இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தமிழ்செல்வன்  அஜந்தன் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த இளைஞர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில் இளைஞரின் திடீர் உயிரிழப்பால் குப்பிளான் கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.


No comments