Header Ads

test

மிக விரைவில் இலங்கையில் கால் பதிக்கவுள்ள சீன வங்கி.

 விரைவில் கொழும்பில் சீனாவின் பிரபல வங்கி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி சீனா அபிவிருத்தி வங்கியின் வலயத்தின் கிளையொன்றை கொழும்பு துறைமுக நகரத்தில் அமைப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பதற்காக சீனாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் சீன மக்கள் காங்கிரஸின் குழுத்தலைவரும், சீன நாடாளுமன்றத்தின் சபாநாயகருமான லீ ஷன்சுவுடன் நேற்று நடைபெற்ற இணையவழி மூலமாக கலந்துரையாடலில் பசில் ராஜபசஷ ஈடுபட்டதாகவும் அறியமுடிகின்றது.


No comments