Header Ads

test

கொவிட் தொற்றால் தாயும் மகனும் இறந்த பெரும் சோகம்.

 கொரோனா வைரஸ் தொற்றால் தாயும், மகனும் உயிரிழந்துள்ள மற்றுமொரு பெருந்துயர் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொரலஸ்கமுவ, திவுல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 52 வயதான சுனிதா டி சில்வா என்ற தாயும், அவரின் மகன் 25 வயதான ட்ரிவின் டி சில்வா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு இலக்காகிய தாய், உயிரிழந்து, 11 நாட்களின் பின்னரே மகனும் உயிரிழந்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் பிரதி பொலிஸ் அத்தியட்சகரான டிரோன் டி சில்வாவின், மனைவி, மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பிரதி பொலிஸ் அத்தியட்சகர் டிரோன் டி சில்வாவின் மனைவி, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 20ம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.


No comments