Header Ads

test

யாழில் பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் திடீர் மரணம்.

  யாழில் செபம் சொல்லிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மரணமான குடும்பப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் வடமராட்சி - அல்வாய் வடமேற்கு, நாச்சிமார் கோயிலடியைச் சேர்ந்த செபபாக்கியம் கிறேஸ் மணி (வயது- 51) என்பவரே இவ்வாறு உயிரிழந் துள்ளார். உயிரிழந்த பெண் கோவளம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் ஜெபித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து உடனடியாக பருத்தித் துறை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் மேற்க்கொள்ளப்பட்ட  பி. சி. ஆர். பரிசோதனைக்கு அமைவாக உயிரிழந்தவருக்கு கொவிட் தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


No comments