Header Ads

test

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் தூபிக்கு அஞ்சலி செலுத்த முயன்ற கஜேந்திரன் உட்பட மூவர் கைது.

 நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்த சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கொவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய நீதிமன்ற தடை உத்தரவின்றி இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு காவல்துறையின் உயர் மட்டத்திலிருந்து பணிக்கப்பட்டிருந்ததுடன் யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை பரிசோதகர் உள்ளிட்ட மூவர் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கு அஞ்சலி செலுத்த முயன்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னதாக தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி காவல்துறையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments