Header Ads

test

இன்று அதிகாலை இடம்பெற்ற துயர சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

கடவத்த, எல்தெனிய பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கணவன் மற்றும் மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை குறித்த வீட்டின் மேல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வீட்டில் இருந்த 57 வயது கணவன் மற்றும் 53 வயது மனைவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த  தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இச்  சம்பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை தெரியவருகின்றது.



No comments