Header Ads

test

பிரபல பாடசாலை உயர் தர மாணவன் கொரோனாவுக்கு பலி.

கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்று வந்த 18 வயதுடைய மாணவன் ஒருவன் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 10 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வீட்டில் தங்கியிருந்த மாணவன் கடந்த 14 ஆம் திகதி களுபோவில வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நோய் தீவிரம் காரணமாக அவருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மாணவன் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments