Header Ads

test

நாட்டை உலுக்கும் இன்னுமொரு காய்ச்சல் .

 இரு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்குமாயின் உடனடியாக வைத்திய ஆலோசயைனைபெறுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது , டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வழமையாகவே அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் டெங்கு மிக வேகமாக பரவும் அபாயம் காணப்படுகின்றமையினால், 2 நாட்களுக்கு மேலும் காய்ச்சல் காணப்படுமாக இருந்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுருத்தியுள்ளார்.


No comments