இராணுவ தளபதி பொது மக்களுக்கு விடுத்த அறிவித்தல்.
எதிர்வரும் மாதம் மிகவும் தீர்மானமிக்கதென்பதனால் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளை கடுமையாக பின்பற்றுமாறு கொவிட் தடுப்பு தேசிய செயற்பாட்டு நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றிற்கான தடுப்பூசி பெறாதவர்கள் முடிந்த அளவு விரைவில் அதனை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மூன்றாவது தடுப்பூசியும் விரைவில் வழங்கப்படலாம் எனவும் தற்போது அதிகமாக உயிரிழப்பவர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி பெறாதவர்கள் என எனவும் இதனால் மக்கள் முடிந்த அளவு வேகமாக தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதம் நாட்டு மக்களுக்கு தீர்மானமிக்க மாதமாக இருக்கலாம் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment