Header Ads

test

யாழில் கொவிட் தொற்று காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உள்பட மாவட்டத்தில் 6 பேர் கோவிட்-19 நோயினால் இன்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 89 வயதுடைய பெண் ஒருவரும், யாழ்ப்பாணம் அரசடி வீதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும், முல்லைத்தீவைச் சேர்ந்த 33 வயதுடைய  ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அச்சுவேலியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 34 வயதுடைய பெண் ஒருவர் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.


No comments