Header Ads

test

முல்லைத்தீவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்.

 முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை சற்று முன்னர் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஆயிரத்து அறுநூற்று நான்காவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களுடைய போராட்ட கொட்டகைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இதுவரை காலமும் தமக்கு எந்தவித நீதியும் கிடைக்கவில்லை என்றும் உடனடியாக தமக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.







No comments