Header Ads

test

யாழில் கொவிட் தொற்றால் அரச உத்தியோகத்தர் மரணம்.

 தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று நண்பகல் உயிரிழந்தார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அச்சுவேலியைச் சேர்ந்த ராஜா ரமேஸ்குமாரன் வயது -44 என்ற தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கொவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர், சுயநினைவற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி  இன்று நண்பகல் உயிரிழந்துள்ளார்.


No comments