Header Ads

test

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

 எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமையினால் பாடசாலைகளை திறக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கல்வி அமைச்சர் தகவல் தெரிவிப்பார் எனவும் தற்போது கொழும்பு மாவட்டத்தில் ஆசிரியர்களில் 99 வீதமானேருக்கும், களுத்துறை மாவட்டத்தின் ஆசிரியர்கள் 99 வீதமானோருக்கும் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதுடன் இந்த மாதம் 22ஆம் திகதிக்கு முன்பதாக நாட்டின் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும்.

ஆசிரியர்கள் ஒன்லைன் கற்கை நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமையினால் மாணவர்களின் கல்விச் செயற்பாடு  தொடர்பில் சிந்திக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதிபர் ஆசிரியர்களின் சம்பளத்திற்கு நியாயம் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி இது தொடர்பில் தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து வருகிவதாக தெரிவித்துள்ளார்.


No comments