Header Ads

test

கண்டியை சேர்ந்தவ நபர் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு.

முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் மரக்காலை ஒன்றில் காவலாளியாக கடமையாற்றி வந்த கண்டியை சேர்ந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கண்டி மாவட்டத்தை சேர்ந்த 54 வயதுடைய இராமையா மகாதேவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மரக்காலை ஒன்றில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை குறித்த உயிரிழந்த நிலையில் இன்று காலை காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் உயிரிழந்த காவலாளி தொடர்பான பிரேத பரிசோதனைக்காக சடலம் மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் பிரேத பரிசோதனைக்காக சடலம் மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பி சி ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


No comments