Header Ads

test

தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்.

பேருவளை பிரதேசத்தில் தந்தையை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் உயிரிழந்தவரின் மகன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தை - மகன் இருவரும் தச்சுக் கொட்டகையை நடத்தி வந்த நிலையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மகன்,இரும்புக் கம்பியால் 60 வயது நிரம்பிய தனது தந்தையை தாக்கி கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments