Header Ads

test

யாழில் வாள்வெட்டுக்குழு வீடு புகுந்து அட்டகாசம்.

யாழ்.புத்துார் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் நேற்றய தினம் இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீட்டு உடமைகள் என்பவற்றை சேதப்படுத்தியுள்ளனர்.

3 மோட்டார் சைக்கிளில், வாள்களுடன் வந்த 6 பேர்கொண்ட குழுவினாலேயே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments