Header Ads

test

கிளிநொச்சியில் கொவிட் தடுப்பூசி ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு.

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் தடுப்பூசி பெற்றவர்களில் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. இன்று மாலை 6 மணிவரை 63 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களிற்கு நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களே இவ்வாறு சுகவீனம் அடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், அவர்களிற்கு தடுப்பூசியினால் தாக்கம் ஏற்படவில்லை எனவும், உடல்நிலை மற்றும் பயம் காரணமாகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சரவணபவன் தெரிவிக்கின்றார்.

இன்று காலை வழமை போன்று தொழிற்சாலைக்கு சென்ற ஊழியர்கள் திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த நோயாளர்களில் அபாயகரமான தாக்கத்தில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும், சாதாரண நோயாளர் விடுதிகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.



No comments