Header Ads

test

திடீரென பற்றியெரிந்த முச்சக்கரவண்டி - அதிஷ்டவசமாக தப்பிய சாரதி.

மன்னார் உப்புக்குளம், புதியதெரு பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி இன்று சனிக்கிழமை (15) காலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

எனினும் குறித்த முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றவர் பாதிப்பின்றி தப்பியுள்ளார்.

காலை 7.30 மணியளவில் மன்னார் உப்புக்குளம் புதிய தெரு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.

இதன் போது தனது வீட்டிற்குச் செல்லும் போது முச்சக்கர வண்டியின் கீழ் பகுதியில் இருந்து புகை வெளி வந்துள்ளதோடு முச்சக்கர வண்டி தீப்பற்ற ஆரம்பித்துள்ளது.

உடனடியாக குறித்த நபர் முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்துள்ளார். எனினும் குறித்த முச்சக்கர வண்டி முழுமையாக தீ பிடித்து எரிந்துள்ளது.




No comments