Header Ads

test

கத்திக்குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் மரணம்.

 முல்லைத்தீவு சுதந்திரபுரம்  இடம்பெற்ற கத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (17) இரவு கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில்  அவர் உயிரிழந்துள்ளார்

இறந்தவரின்  உடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்படட நிலையில் இன்று (18) முல்லைத்தீவு மாவட்ட  நீதிபதி ரி.சரவணராஜா புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் உடலத்தை பார்வையிட்டார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தை பார்வையிட்டதன் அடிப்படையில்  குறித்த நபருக்கு  பி சி ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு  பெறுபேறுகள் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்

சம்பவத்தில் உயிரிழந்தவர் சுதந்திரபுரம் கொலனி   பகுதியை சேந்த 25 வயதுடைய குணராசா நிதர்சன்  என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்டுவரும்  புதுக்குடியிருப்பு பொலிசார் தாக்குதல் நடாத்திய சந்தேக நபர்  தலைமறைவாகியுள்ள நிலையில் குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கைகள்  மேற்கொண்டு வருகின்றனர்.



No comments