Header Ads

test

கொரோனாத் தொற்றாளர்களுக்கு வீட்டில் சிகிச்சையளிப்பதால் பிரச்சினை ஏற்படும் - பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை.

 கொரோனாத் தொற்றாளர்களுக்கு வீட்டில் சிகிச்சையளிப்பதால் பிரச்சினை ஏற்படும் -  பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை.  

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு வீட்டில் சிகிச்சையளிப்பது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்று பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும், நோய் அறிகுறிகள் காட்டாத நோயாளர்கள் நாளை முதல் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவர் என்று ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்திருந்தார். இவ்வாறு வீட்டிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள் கொரோனாக் கட்டுப்பட்டு நிலையத்தால் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்தநிலையில், வீடுகளில் வைத்து சிகிச்சையளிப்பதற்குப் போதியளவு உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.


No comments