Header Ads

test

வெளி மாவட்டங்களிலிருந்து முல்லைத்தீவிற்கு கடமைக்கு செல்ல முடியாத நிலையில் அரச உத்தியோகத்தர்கள்.

வெளி இடங்களில் இருந்து தனிமைப்பவெளி மாவட்டங்களிலிருந்துடுத்தல் பகுதிக்கு பணிக்கு செல்லமுடியாத நிலையில் அரச உத்தியோகத்தர்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு,முள்ளியவளை,முல்லைத்தீவு பொலீஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன இன்னிலையில் வெளி பிரதேசங்களான ஒட்டுசுட்டான்,நெடுங்கேணி,மாங்குளம்,கிளிநொச்சி பகுதிகளில் இருந்து பணிக்கு செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஒருசில அரச உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு நகர்பகுதியிலேயே பல திணைக்களங்களின் தலைமைப்பணிமனைகள் மற்றும் அலுவலகங்கள் வடமாகண பணிமனையின் அலுவலகங்கள் காணப்படுகின்றன இவற்றில் பணியாற்ற செல்லும் போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எல்லைப்பகுதிகளில் வீதிகளில் காவல் கடமையில் நிக்கும் படையினர் தடை வித்துள்ளார்கள் பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ் உள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்களை தவிர வேறு எந்த திணைக்களங்களின் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தல் பகுதிக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளார்கள்


இவ்வாறான நிலையில் திணைக்களங்கள் அலுவலகங்களிளன் தலைமை பணிமனையினர் யாழ்ப்பாணத்தில் இருந்து சொல்கின்றார்கள் பணிக்கு செல்லுங்கள் என்று ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு தாங்கள் சென்று திரும்பி வீடு திரும்பியுள்ளதாக பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.


No comments