Header Ads

test

கிளி.தருமபுரத்தில் 72 பியர் ரின்னுடன் ஒருவர் கைது.

 கிளிநொச்சி - தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் 72 ரின் பியருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்று குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பியரை விற்பனைக்குத் தயார் நிலையில் மறைத்து வைத்திருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தருமபுர பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments