Header Ads

test

மன்னாரில் 4வது கோவிட் தொற்றாளி மரணம்.

 மன்னார் மாவட்டத்தில் 4 ஆவது கோவிட் தொற்று மரணம் பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இம்மரணம் இன்றைய தினம் புதன் கிழமை மதியம் நிகழ்ந்துள்ளது. 

கடந்த ஒரு வாரமாக மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் திருக்கேதீஸ்வரத்தைச் சேர்ந்த 64 வயதுடைய (ஆண்) கோவிட் தொற்றாளர் ஒருவர் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையிலேயே அவர் இன்று புதன் கிழமை உயிரிழந்தார்.

அவருடைய மரணத்திற்கு கோவிட் தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணம் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் தெரிவித்துள்ளார்.



   


No comments