Header Ads

test

திருகோணமலையில் கணவன் மனைவி விபத்து.

 திருகோணமலை - ஹொரவபொத்தான பிரதான வீதியின், பம்மதவாச்சி பகுதியில் இன்று முற்பகல் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கணவரும், மனைவியும் படுகாயமடைந்துள்ளனர்.

கிண்ணியாவில் இருந்து மன்னார் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆட்டோவே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மன்னார்- எருக்கலம்பிட்டி, புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த எம்.ஐ.எம்.பர்ஜுன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.



 

No comments