Header Ads

test

பொலிஸ் உத்தியோகத்தரின் கை விரலை கடித்து குதறிய யாழ் இளைஞன் கைது.

 பொலிசாரின் கை விரலை கடித்ததாக இளைஞன் ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ் நாகவிகாரையில் கடமையிலிருந்த பொலிசாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் நேற்று இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது .

தொடர்ந்து கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பொலிசாரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளார்.

காயத்துக்குள்ளான பொலிசார் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விரலை கடித்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

No comments