Header Ads

test

தாய் மற்றும் மகன் இருவரும் விசமேறி மரணம் - பல கோணங்களில் பொலிஸ் விசாரணை.

 பொலன்னறுவை- பிஹிடிவெவ- நுவரகல பிரதேசத்தில் தாய் மற்றும் மகன் ஆகியோருக்கு உடலில் விஷமேறியமையினால் நேற்று (02) இரவு உயிரிழந்துள்ளனர்.

6 வயதுடைய மகனும் 28 வயதுடைய தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவருடைய மூன்று வயது மகனின் உடலிலும் விஷமேறியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments