Header Ads

test

வீட்டுத்திட்ட கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள இழுபறி தொடர்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி.

 முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான வீட்டுத்திட்டங்களுக்கான கொடுப்பனவு முழுமையாக வழங்கப்படாமல் இருப்பதாக பயனாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், தமது வீட்டுத்திட்டத்திற்கு மீதி கொடுப்பனவுகளை மிக விரைவாக பெற்றுத் தருமாறு கோரி மாங்குளத்தில் அமைந்திருக்கின்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் காரியாலயத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக தமக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கான மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்படாது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், வீட்டுத்திட்டத்தை பெற்றவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். ஆரம்ப கொடுப்பனவு வழங்கப்பட்ட போதும் மீதி கொடுப்பனவு வழங்கப்படாமை காரணமாக பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள மக்கள் தமது கொடுப்பனவை மிக விரைவாக பெற்றுத் தருமாறு கோரியே குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று முன்னெடுத்து வருகின்றனர்.





No comments