Header Ads

test

குளமொன்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு - கிளிநொச்சியில் சம்பவம்.

கிளிநொச்சி அம்பாள் குளத்தில் பெண்ணொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதுடன் குளக்கட்டினை அண்மித்து ஒதுங்கியுள்ள சடலம் பற்றிய தகவல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் தெரியவருவதாவது, இப் பெண் 30 வயது மதிக்கதக்கவர் என்பதுடன் சம்பவ இடத்திலிருந்து பாதணிகள் மற்றும் கைப்பை போன்றனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளதுடன் சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments