Header Ads

test

மரணத்திலும் இணை பிரியாத தம்பதிகள்.

 தமிழகத்தில் உள்ள கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (70).

இவரது மனைவி சரோஜினி (65). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இதையடுத்து, சமீபத்தில் விபத்து ஒன்றில் அவரது ஒரே மகன் இறந்து விட்டார். இது கணவன் மனைவியை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இதனால், மகன் இறந்த சோகம் ஒரு பக்கம் இருந்தாலும், வீட்டின் கஷ்டத்திற்காக, ஓய்வு பெற்ற அதிகரியான ராமமூர்த்தி அருகில் உள்ள வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது, வெல்டிக் செய்யும்போது தீப்பொறி கண்ணில் பட்டு காயம் அடைந்தார். அதன் பின்னர் கண் பார்வை மங்கியுள்ளது.

இதைத்தவிர, அவருக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவரை அவரது மனைவி சரோஜினி கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த நாள் அதிகாலை ராமமூர்த்திக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த சரோஜினி அவருக்கு முதல் உதவி செய்தார்.

மருத்துவனைக்கு சென்ற ராமமூர்த்தியை சோதனை செய்து பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.

கணவர் இறந்த தகவலைக் கேட்ட சரோஜினி பித்துப் பிடித்தது போல மயங்கினார். மேலும், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சரோஜினியையும் மருத்துவர் மூலம் பரிசோதனை செய்தனர். அவரும் இறந்துவிட்டதாக மருத்துவர் கூறினார்.

இது ராமமூர்த்தி மற்றும் சரோஜினி குடும்பத்தினரைப் பேரதிர்ச்சியில் தள்ளியது. மேலும், சாவிலும் இணைபிரியாத தம்பதியின் இறப்பு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments