நீர்வீழ்ச்சியில் நீராடும்போது இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
கொலொன்ன, வெல்வதுகொட திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராடும்போது இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 17 வயதுடைய கொடகவெல, ஹல்வின்ன பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு உயிரழந்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொலொன்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment