விடுதலை புலிகளின் ஆயுதங்கள் மாலதி படையணியின் பயிற்ச்சி முகாமில் கண்டுபிடிப்பு.
யாழ்.மாவட்டம் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது மாலதி படையணியினரின் பயிற்சி முகாம் வரணி- தாவளை இயற்றாளைப் பகுதியில் இயங்கி வந்தது.
குறித்த பெண்கள் படையணியினரின் பயிற்சிக்காக பயன்படுத்திய துப்பாக்கி அப் பகுதியில் இன்று காணப்பட்டதை அடுத்து பொதுமக்களால் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் துப்பாக்கியை மீட்டனர்.
பின்னர் மீட்கப்பட்ட துப்பாக்கியை பரிசோதித்தபோது அது மரத்தினாலான பொம்மைத் துப்பாக்கி எனத் தெரிய வந்தது.
இதேவேளை போர்ப் பயிற்சி வழங்கும்போது மரத்தினாலான பொம்மைத் துப்பாக்கிகள் பயன்படுத்துவது வழமை என கூறப்படுகிறது.
Post a Comment