Header Ads

test

தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர் இன்று குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

 தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர் இன்று (30.03.2021) குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை மயானத்தில் அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்றுகொண்டிருந்த வேளையில் பட்டாசு கொளுத்தி வீசப்பட்டுள்ளது. இவ்வாறு வீசப்பட்ட பட்டாசு குளவிக்கூடு மீது விழுந்துள்ளது. இதனையடுத்தே குளவிகள் கலைந்து வந்து அவ்வீதி ஊடாக பயணித்தவர்கள் மீது கொட்டியதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு சிகிச்சைகளின் பின்னர் அவர்கள் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments