Header Ads

test

அமெரிக்காவில் மசாஜ் நிலையத்தில் இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

 அமெரிக்காவில் மசாஜ் நிலையத்தில் இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

ஜோர்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகரின் அக்வொர்த் பகுதியில் ஆசியாவைச் சேர்ந்த சிலர் மசாஜ் நிலையம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த நிலையத்துக்குள் நுழைந்த இனந்தெரியத நபர் அங்கிருந்தவர்களைத் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

தொடர்ச்சியாக மற்றொரு மசாஜ் மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 பேர் சம்பவ இடத்திலும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்டவரை பொலிசார் தேடி வருகின்றனர்.



No comments