Header Ads

test

விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த 6 தாய்லாந்து பிரஜைகள் கைது.

 உரிய விசா அனுமதி பத்திரம் இன்றியும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியும் இலங்கையில் தங்கியிருந்த 6 தாய்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கொழும்பு - 03 பகுதியிலுள்ள அந்தோனி மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண புலனாய்வு பிரிவினர் கோட்டை நீதவான் நீதிமன்றில் பெற்றுக் கொண்ட அனுமதிக்கிணங்க நேற்று இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


No comments