Header Ads

test

எஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டினர் 50 பேரின் தலையை துண்டித்து கொலை வெறியாட்டம்.

 மொசாம்பிக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டினர் 50 பேரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மொசாம்பிக் நாட்டில் வெளிநாட்டவர்கள் மீது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளது. சுமார் 50 பேர்களின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 17 வாகனங்களில், வெளியேறிய நிலையில், அவர்கள் மீது ஐ.எஸ் அமைப்பு சரமாரியான துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனையடுத்து பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து தற்போது அவர்களை கொடூரமாக கொலைசெய்து உள்ளது தெரிய வந்துள்ளது.

53,000 பேர்கள் குடியிருக்கும் சுரங்க நகரமான பால்மாவை சுமார் 100 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு சேகரிக்கும் பகுதியாக பால்மா அறியப்படுகிறது.

இப்பகுதியில் இருந்து சுமார் 1,400 பேர் படகு மூலம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், தெருவில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் பலரது உடல்கள் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.



No comments