Header Ads

test

வவுனியா சிதம்பரபுரம், கற்குளம் பகுதியில் மாணவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம்.!!!

வவுனியா சிதம்பரபுரம், கற்குளம் பகுதியில் மாணவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம்.!!!

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் நேற்றையதினம் (02) பாடசாலை மாணவி  பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக  வவுனியா பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இவ்­வி­டயம் தொடர்பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் வசிக்கும் குறித்த பாடசாலை மாணவியுடன் (வயது-15) குறித்த பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய குறித்த நபர் தொலைபேசி மூலம் சில தினங்களாக கலந்துரையாடியுள்ளார்.

இதன் பின்னர் குறித்த நபர் நேற்றையதினம் காலை 10.00 மணியளவில் தொலைபேசி மூலம் மாணவியை கற்குளம் பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனையடுத்து குறித்த மாணவியும் அக்  காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன் போது பாடசாலை மாணவியை குறித்த நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்றதன் பின்பு வீடு திரும்பிய மாணவி தக்கு இழைக்கப்பட்ட துஸ்பிரயோகம் தொடர்பில் தந்தையிடம் தெரிவித்தமையினையடுத்து, தந்தை மற்றும் மாணவி சகீதம் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து இவ்விடயம் தொடர்பில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்க்கொண்ட சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் தலைமறைவானதினையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் வவுனியா பொலிஸார் இடுபட்டுள்ளனர்.

துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட மாணவியை  மருத்துவ பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments