Header Ads

test

ஞானசார தேரரைக் கைது செய்யக்கோரி யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி.!!!

ஞானசார தேரரைக் கைது செய்யக்கோரி யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி.!!!

முல்லைத்தீவு,நீராவியடி ஆலய வளாகத்தில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்தும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர்  ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தியும் யாழ்.நகரில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் பொதுப் போராட்டமாக யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (05) இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார்  ஆலய விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி, பௌத்த பிக்குவின் உடல் ஆலய முன்றிலில் எரிக்கப்பட்டதைக் கண்டித்தும்  அடாவடியில் ஈடுபட்ட ஞானசார தேரர் மற்றும் அவரது குழுவினரையும் கைது செய்யவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமைக்குக் காரணம் என்னவென இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கட்சியின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா, கட்சியின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சபா.குகதாஸ்,கட்சியின் முக்கியஸ்தர்களும், உறுப்பினர்களும் மற்றும்  தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘சட்டம் ஒழுங்கு யார் கையில்? அரசே பதில் சொல்’தேசிய சண்டியனான ஞானசார தேரரைக் கைது செய்’ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.









No comments