Header Ads

test

அங்கஜன் இராமநாதனின் நான்கு அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா ஏற்பு.!!!

அங்கஜன் இராமநாதனின்  நான்கு அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா ஏற்பு.!!!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்த 4 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் ஏற்றுக்கொண்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது -

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் ஜனாதிபதி வேட்பாளர்  கோத்தபாய ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பில் இடம் பெற்றது.

இச்சந்திப்பில் தமிழ் மக்களுக்கான அவசியமான நான்கு பிரதான அம்சங்களை உள்ளடக்கிய கோரிக்கை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

* தமிழ் மக்களின் ஜனநாயக சமவுரிமை

* பாதிக்கப்பட்டோருக்கான முன்னுரிமை

* தமிழர்களை உள்ளடக்கிய ஆட்சி

* வடக்கு மண்ணின் துரித மீள் எழுச்சி

போன்ற நான்கு விடயங்களை முன்னிலைப் படுத்தி தயாரிக்கப்பட்ட அறிக்கை கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments